search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பெண் போலீசிடம் செல்போன் பறிப்பு - 3 பேர் கைது

    வேலூர் சத்துவாச்சாரியில் பெண் போலீசிடம் செல்போன் பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    ஆற்காடு அடுத்த விளாபாக்கத்தை சேர்ந்தவர் அஞ்சலி (வயது27). பெண் போலீசான இவர் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட குற்றப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.

    நேற்று மாலை பணி முடிந்து தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு புறப்பட்டார். சத்துவாச்சாரி சாலை கெங்கை அம்மன் கோவில் அருகே சென்றபோது அவரது போனுக்கு அழைப்பு வந்தது இதனையடுத்து ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் வேகமாக வந்து அஞ்சலியின் செல்போனை பறித்துக்கொண்டு சென்று விட்டனர். இதுபற்றி அஞ்சலி சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார். சம்பவம் நடந்த சாலை கெங்கை அம்மன் கோவில் அருகே கடந்த புதன்கிழமை இரவு வாலிபர் ஒருவரிடமும் கும்பல் செல்போனை பறித்து சென்றனர்.

    தொடர் சம்பவத்தையடுத்து போலீசார் கும்பலை பிடிக்க முடுக்கி விடப்பட்டனர்.

    தனிப்படை போலீசார் சத்துவாச்சாரி பகுதியில் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு பைக்கில் வந்த 3 பேரை மடக்கி விசாரித்தனர். அவர்கள் வேலூர் ஓல்டு டவுனை சேர்ந்த வசந்தகுமார் (22), குட்டி அப்பு (27), ராகுல் (19) என்பது தெரியவந்தது.

    அவர்கள் முன்னுக்குபின் பதில் கூறியதால் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது பெண் போலீஸ்காரர் அஞ்சலியிடம் அவர்கள் செல்போன் பறித்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும் திருட்டு சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×