என் மலர்
செய்திகள்

திருட்டு
அரசு பள்ளி ஆசிரியையிடம் நகை பறிக்க முயற்சி - ஹெல்மெட் கொள்ளையர்கள் அட்டகாசம்
சத்தியமங்கலம் அருகே அரசு பள்ளி ஆசிரியையிடம் நகை பறிக்க முயன்ற சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை கவிதா (வயது45). இவர் சத்தியமங்கலம் அருகே உள்ள செமடாபாளையம் ஊரை சேர்ந்தவர்.
இவர் நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கும்போது சிவியார் பாளையம் என்ற இடத்தில் ஹெல்மெட் அணிந்த இரண்டு மர்ம நபர்கள் கவிதா அணிந்திருந்த 7 பவுன் தாலிக்கொடியை பறிக்க முயன்றனர். பறிக்கும் போது தாலிக்கொடி இரண்டாக அறுந்ததால் தாலிக்கொடியுடன் கவிதா கீழே விழுந்துவிட்டார். கீழே விழுந்த சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரும்போது ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
கீழே விழுந்த கவிதாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை கவிதா (வயது45). இவர் சத்தியமங்கலம் அருகே உள்ள செமடாபாளையம் ஊரை சேர்ந்தவர்.
இவர் நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கும்போது சிவியார் பாளையம் என்ற இடத்தில் ஹெல்மெட் அணிந்த இரண்டு மர்ம நபர்கள் கவிதா அணிந்திருந்த 7 பவுன் தாலிக்கொடியை பறிக்க முயன்றனர். பறிக்கும் போது தாலிக்கொடி இரண்டாக அறுந்ததால் தாலிக்கொடியுடன் கவிதா கீழே விழுந்துவிட்டார். கீழே விழுந்த சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரும்போது ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
கீழே விழுந்த கவிதாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






