என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அறந்தாங்கி அருகே மின்சாரம் தாக்கி பெண்பலி
Byமாலை மலர்20 Sep 2019 4:23 PM GMT (Updated: 20 Sep 2019 4:23 PM GMT)
அறந்தாங்கி அருகே மழையின் காரணமாக வீட்டின் முன்னால் அறுந்து விழுந்து கிடந்த மின்சார வயரை மிதித்த பெண் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
அறந்தாங்கி:
அறந்தாங்கியை அடுத்த நீர்விளங்குளத்தைச் சேர்ந்தவர் குமார்(வயது42) விவசாயி. இவரது மனைவி சவுந்திரவள்ளி (40).இவரது மகள் இலக்கியா(8).நேற்று மாலை அறந்தாங்கி பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதேப்போல நீர்விளங்குளம் பகுதியிலும் மழை பெய்தது. அப்போது சவுந்திர வள்ளி வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். மழையின் காரணமாக வீட்டின் முன்னால் அறுந்து விழுந்து கிடந்த மின்சார வயரை மிதித்துள்ளார்.
இதில் சவுந்திரவள்ளி வீசப்பட்டார். இதைப்பார்த்த இலக்கியாவும் தாயை காப்பாற்ற நினைத்து அவரை தொட்டபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சவுந்திரவள்ளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இலக்கியா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X