என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூரில் அரிசி வியாபாரியை தாக்கி பணம் பறித்த மேலும் ஒருவர் கைது
Byமாலை மலர்16 Sep 2019 11:08 AM GMT (Updated: 16 Sep 2019 11:08 AM GMT)
வேலூரில் அரிசி வியாபாரியை தாக்கி பணம் பறித்த மேலும் ஒருவரை கைது செய்த போலீசார் இது தொடர்பாக 2 பேரை தேடி வருகின்றனர்.
வேலூர்:
ஆரணி அடுத்த களம்பூரை சேர்ந்தவர் கோதண்டராமன் (வயது 49). அரிசி வியாபாரி. இவர் திருவண்ணாமலை, வேலூரில் உள்ள கடைகளுக்கு அரிசி வினியோகம் செய்து, அதற்கான பணத்தை வசூலித்து செல்வது வழக்கம்.
அதன்படி கடந்த 4-ந் தேதி வேலூர் வந்த கோண்டராமன் வேலப்பாடி பகுதியில் அரிசி வினியோகித்த வியாபாரிகளிடம் வசூலித்த ரூ.2 லட்சத்தை ஒரு கைப்பையில் வைத்துக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் திடீரென கோதண்டராமனிடம் இருந்து பணப்பையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
இது குறித்து அவர் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த சேகர் (30), ஸ்ரீதரன் உள்பட 4 பேர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சேகரை போலீசார் கடந்த 10-ந் தேதி கைது செய்தனர். இந்த நிலையில் வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதரன் (28) கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆரணி அடுத்த களம்பூரை சேர்ந்தவர் கோதண்டராமன் (வயது 49). அரிசி வியாபாரி. இவர் திருவண்ணாமலை, வேலூரில் உள்ள கடைகளுக்கு அரிசி வினியோகம் செய்து, அதற்கான பணத்தை வசூலித்து செல்வது வழக்கம்.
அதன்படி கடந்த 4-ந் தேதி வேலூர் வந்த கோண்டராமன் வேலப்பாடி பகுதியில் அரிசி வினியோகித்த வியாபாரிகளிடம் வசூலித்த ரூ.2 லட்சத்தை ஒரு கைப்பையில் வைத்துக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் திடீரென கோதண்டராமனிடம் இருந்து பணப்பையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
இது குறித்து அவர் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த சேகர் (30), ஸ்ரீதரன் உள்பட 4 பேர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சேகரை போலீசார் கடந்த 10-ந் தேதி கைது செய்தனர். இந்த நிலையில் வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதரன் (28) கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X