என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தியமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
Byமாலை மலர்13 Sep 2019 5:19 AM GMT (Updated: 13 Sep 2019 5:19 AM GMT)
சத்தியமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில உள்ள சார்பதிவாளர் அலுவலகம் முன் வேகமாக ஒரு கார் நின்றது.
காரிலிருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இறங்கி சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தனர்.
பிறகு அவர்கள் யாரும் எங்கும் போகக்கூடாது. அனைவரும் உட்கார்ந்த இடத்திலேயே அப்படியே உட்காருங்கள் என்று உத்தரவிட்டனர்.
சார்பதிவாளர் அலுவலக கதவும் இழுத்து சாத்தப்பட்டது. இதனை தொடர்ந்து காரில் வந்து இறங்கிய 2 பெண்கள் உள்பட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்த அதிரடி சோதனை நள்ளிரவு 11.30 மணி வரை 6 மணி நேரம் நடந்தது.
நேற்று மட்டும் 92 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன. சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அதே சமயம் லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவாளர் அலுவலகத்திலிருந்து முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X