என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வகுப்பறையில் பேராசிரியர் திட்டியதால் கல்லூரி மாணவர் தற்கொலை
Byமாலை மலர்12 Sep 2019 1:41 PM GMT (Updated: 12 Sep 2019 1:41 PM GMT)
பொன்னமராவதி அருகே வகுப்பறையில் பேராசிரியர் அவதூறாக திட்டியதால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
பொன்னமராவதி:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் கார்த்திக் (வயது 18). இவர் மேலைச்சிவபுரியில் உள்ள கல்லூரியில் பி.காம்., முதலாமாண்டு படித்து வந்தார். இவரை அதே கல்லூரியில் வணிகவியல் துறையில் பேராசிரியராக பணிபுரியும் துரைப்பாண்டி என்பவர் வகுப்பறையில் வைத்து அவதூறாக திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த கார்த்திக் எலிமருந்தை தின்று விட்டார். உயிருக்கு போராடிய அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு கார்த்திக் இறந்தார்.
இதுகுறித்து பொன்னமராவதி போலீசில், கார்த்திக்கின் தாய் புஷ்பவள்ளி புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து, பேராசிரியர் திட்டியதால் கார்த்திக் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X