என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பண்ருட்டி அருகே முந்திரி விவசாயி கொலையில் தாய்-மகன் கைது
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது அழகுசமுத்திரம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது70) முந்திரி விவசாயி. அதே கிராமத்தில் உள்ள குளத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் அசோகன் (54).
இவரது விவசாய நிலமும் சுப்பிரமணியன் விவசாய நிலமும் அருகருகே உள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி நிலத்தகராறு ஏற்பட்டுவந்தது. இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை அசோகன் அவரது நிலத்தில் விவசாய வேலையில் ஈடுபட்டுகொண்டிருந்தார். அப்போது பிரச்சினைக்குரிய நிலத்தில் உள்ள வரப்பில் இருந்த கல்லை அவர் அகற்றினார். அந்த நேரத்தில் அங்கு வந்த சுப்பிரமணியன் கல்லை ஏன் அகற்றுகிறாய் என்று அசோகனிடம் தட்டிகேட்டார்.
இதனால் அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் அசோகனின் மனைவி செந்தமிழ் செல்வி (55), மகன் மருதுபாண்டி (24 ) ஆகியோரும் அங்கு வந்தனர். அவர்களும் சுப்பிரமணியனிடம் தகராறு செய்தனர். அப்போது ஆத்திரமடைந்த அசோகன் கையில் வைத்திருந்த கத்தியால் சுப்பிரமணியன் தலையில் வெட்டினார்.
மேலும் செந்தமிழ்செல்வியும், மருது பாண்டியும் உருட்டு கட்டையால் சுப்பிரமணியனை தாக்கினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த சுப்பிரமணியன் அதே இடத்தில் மயங்கி விழுந்தார். இதை அறிந்ததும் அசோகனும் அவரது மனைவி மற்றும் மகன் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
விவசாய நிலத்தில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த சுப்பிரமணியனை அங்கிருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவரது உடலை பரிசோதித்து பார்த்தபோது. அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.
விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் காடாம்புலியூர் போலீசாருக்கு தெரியவந்தது. உடனே பண்ருட்டி துணைபோலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர் மலர்விழி, மற்றும் போலீசார் சம்பவம் இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து செந்தமிழ்செல்வி அவரது மகன் மருதுபாண்டி ஆகியோரை இன்று காலை கைது செய்தனர். அசோகன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நிலத்தராறில் முந்திரி விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்