search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
    X
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

    சாலையை சீரமைக்க கோரி வேப்பங்குடியில் 10-ந்தேதி கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

    வேப்பங்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 10 ந்தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    ஆலங்குடி:

    திருவரங்குளம் ஒன்றியம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேப்பங்குடி கிளை கூட்டம் நடைபெற்றது. அடைக்கலம் தலைமை வகித்தார். கிளை செயலாளர் சங்கர்கணேஷ் அறிக்கை சமர்ப்பித்தார். ஒன்றிய செயலாளர் சொர்ணகுமார், துணை செயலாளர் செல்வராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் குமார் ஆகியோர் பங்கேற்று கூட்டத்தை நடத்தினர்.

    கூட்டத்தில் படுமோசமான திருவரங்குளம் வேப்பங்குடி சாலையை செப்பனிட வேண்டும், அடிப்படை வசதிகள் இல்லாத மயானத்தை சரி செய்ய வேண்டும், ஆமை வேகத்தில் நடைபெறும் வேப்பங்குடி திருகட்டளை இணைப்புச்சாலையை துரிதப்படுத்த வேண்டும், வேப்பங்குடி கிராமத்தில் தனியாக போர் போட்டு குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 10.9.2019 அன்று மாநில அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×