என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "road reform"
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் இருந்து போல்நாயக்கன்பட்டிக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு பூமிபூஜை நடைபெற்றது.
உடனடியாக அங்கு சல்லி கற்கள் பரப்பப்பட்டன. அத்தோடு பணி நின்றுவிட, பொதுமக்கள் அவதிக்கு ஆளானார்கள். கடந்த ஒரு மாத காலமாக அந்த வழியே சென்று வந்த மாணவ -மாணவிகள் சாலையில் நடக்க முடியாமல் தவித்தனர்.
கர்ப்பிணி பெண்கள், இருசக்கர வாககனங்களில் செல்வோர் சறுக்கி விழுந்து காயம் அடைந்தனர். ஆனாலும் சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை திருமங்கலம-உசிலம்பட்டி சாலையில் சாத்தங்குடி விலக்கில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மறியல் குறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகளும், போலீசாரும் விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்