என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேவகோட்டையில் காய்கறி மார்க்கெட்டில் தீ விபத்து- 10 கடைகள் எரிந்து நாசம்
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பஸ் நிலையம் அருகில் நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்டோர் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். பெரும்பாலான கடைகள் கீற்று கொட்டகையில் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் மார்க்கெட்டில் உள்ள நாகராஜன் என்பவரின் காய்கறி கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கீற்று கொட்டகை என்பதால் தீ மளமளவென அருகில் உள்ள மற்ற கடைகளிலும் பரவியது.
அப்போது அந்த வழியாக தேவகோட்டை டவுன் போலீசார் ரோந்து வந்தனர். மார்க்கெட்டில் தீ எரிவதை பார்த்த அவர்கள் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 45 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் மார்க்கெட்டில் இருந்த காய்கறி, பேன்சி, இறைச்சி கடைகள் என 11 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையானது.
தீ விபத்து சம்பவம் தொடர்பாக தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது சமூக விரோதிகள் யாரேனும் தீவைத்து சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்