search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தேவகோட்டை அருகே குடியிருப்பு பகுதியில் வெடி பொருட்கள் பதுக்கல்- வியாபாரி கைது

    தேவகோட்டை அருகே குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி வெடி பொருட்கள் பதுக்கிய வியாபாரி கைது செய்யப்பட்டார்.

    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே உள்ள மருதவயலைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 43). இவர் திருப்பத்தூர் சாலையில் பட்டாசு கடை நடத்தி வருகிறார்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆரோக்கியராஜ் ஏராளமான பட்டாசுகளை கொள்முதல் செய்துள்ளார். இவை கடையில் அடுக்கி வைக்கப்பட்டன.

    மேலும் பட்டாசு பாக்சுகள் வாங்கிய அவர், எம்.எம்.நகர் 2-வது வீதியில் ஒரு வீட்டில் அடுக்கி வைத்துள்ளார். குடியிருப்பு பகுதியில் பட்டாசு வைக்க கூடாது என வீதிகள் இருந்தும் அதனை மீறி ஆரோக்கியராஜ் வைத்துள்ளார்.

    நேற்று இரவு அவர் வெடி பொருட்கள் பதுக்கிய வீட்டிற்கு வந்தார். அப்போது அந்தப்பகுதி பெண்கள் திரண்டு வீட்டை முற்றுகையிட்டனர். இங்கு பட்டாசுகள் வைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் தேவகோட்டை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருதுபாண்டி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்லமுத்து ஆகியோர் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி பட்டாசுகளை வைத்திருந்ததாக ஆரோக்கியராஜ் கைது செய்யப்பட்டார். இவரது கடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உரிமம் இன்றி நாட்டு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு உரிமம் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    அதன் பின்னர் தற்போது உரிமம் பெற்ற நிலையில் குடியிருப்பு பகுதியில் பட்டாசுகள் பதுக்கியதாக ஆரோக்கியராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    Next Story
    ×