என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூரண மதுவிலக்கு கோரி 15ந்தேதி சென்னையில் உண்ணாவிரதம் - குமரி அனந்தன் பேட்டி
Byமாலை மலர்26 Aug 2019 3:40 AM GMT (Updated: 26 Aug 2019 3:40 AM GMT)
பூரண மதுவிலக்கு கோரி அடுத்த மாதம் 15-ந்தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காந்திய பேரவை இயக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என குமரி அனந்தன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம்:
காந்திய பேரவை இயக்க தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குமரி அனந்தன் நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு வந்தார். அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அண்ணா பிறந்ததினமான செப்டம்பர் 15-ந்தேதி அன்று தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அறிவிக்க கோரி காந்திய பேரவை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
தமிழக முதல்-அமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா, திருக்குறளின் வழிகாட்டுதல்படியும், அப்போதைய எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்றும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். ஆனால் தற்போது அவரது பெயரை கொண்ட தமிழகத்தை ஆளும் கட்சி, வீதிகள் தோறும் மதுக்கடைகளை திறந்து மக்களை சீரழித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
காந்திய பேரவை இயக்க தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குமரி அனந்தன் நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு வந்தார். அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அண்ணா பிறந்ததினமான செப்டம்பர் 15-ந்தேதி அன்று தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அறிவிக்க கோரி காந்திய பேரவை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
தமிழக முதல்-அமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா, திருக்குறளின் வழிகாட்டுதல்படியும், அப்போதைய எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்றும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். ஆனால் தற்போது அவரது பெயரை கொண்ட தமிழகத்தை ஆளும் கட்சி, வீதிகள் தோறும் மதுக்கடைகளை திறந்து மக்களை சீரழித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X