search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமான நிலையம்
    X
    சென்னை விமான நிலையம்

    சென்னை விமான நிலையத்தில் மர்ம பையால் பரபரப்பு

    சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த மர்ம பையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆலந்தூர்:

    சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதியில் உள்ள இருக்கையில் ஒரு பை இருந்தது. நீண்ட நேரமாக அதை எடுக்க யாரும் வரவில்லை. ஒலி பெருக்கியில் அறிவிப்பு செய்யப்பட்டது என்றாலும் பயன் இல்லை.

    இதையடுத்து மத்திய தொழிற்படை போலீசார் மோப்பநாய் மற்றும் வெடி குண்டு சோதனை கருவிகளுடன் அங்கு சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சோதனையில் அந்த பையில் பழைய துணிகள் இருந்தது தெரிய வந்தது. அதன்பிறகே போலீசாரும், அங்கு இருந்தவர்களும் கடும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    Next Story
    ×