search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    படுகாயம்
    X
    படுகாயம்

    செந்துறை அருகே பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவன் படுகாயம்

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பள்ளி சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் மாணவன் படுகாயமடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள விழுப்பணங்குறிச்சியில் தனியார் உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நல்லநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரது மகன் சந்தோஷ்குமார் (வயது 10) 5ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார்.

    பின்னர் இடைவேளை நேரத்தில் மாணவர்களுடன் கழிவறைக்கு சென்றான். அப்போது அவன் மேல் கழிவறை சுவர் இடிந்து விழுந்தது. உடனே மாணவன் சந்தோஷ்குமார் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஆசிரியர்கள் விரைந்து வந்து, இடிபாடுகளில் சிக்கிய சந்தோஷ்குமாரை மீட்டனர். இந்த திடீர் விபத்தில் சந்தோஷ் குமார் படுகாயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சந்தோஷ்குமார் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த விபத்தில் மாணவனின் தலை, கால் மற்றும் இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து செந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×