என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலங்குடியில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்11 Aug 2019 4:45 PM GMT (Updated: 11 Aug 2019 4:45 PM GMT)
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் வட்டஞ்கச்சேரி திடலில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் வடிவேல் முன்னிலை வகித்துப் பேசினார்.
மாவட்டக்குழு உறுப்பினர் சிவக்குமார், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், நாடியம்மை ஆகியோர் பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்துப் பேசினார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். அப்போது ஆலங்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முறையாகக் குடிநீர் வழங்கப்படாதைக் கண்டித்தும், சாக்கடைகளை முறையாக பராமரிக்காததை கண்டித்தும், பேசினார். மேலும் ஜம்மு காஷ்மீர் சிறப்புச் சட்டம் 370 ஐ ரத்து செய்தது அம்மாநில மக்களுக்கு பாரதிய ஜனதா கட்சி செய்த துரோகம் என்றும் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சண்முகம், கனகராஜ், கருப்பையா, சாகுல் ஹமீது, கலைச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X