என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 1,450 போலீசார் பாதுகாப்பு
Byமாலை மலர்10 Aug 2019 10:24 AM GMT (Updated: 10 Aug 2019 10:24 AM GMT)
சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் முழுவதும் 1,450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:
நாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி (வியாழக்கிழமை) சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி விமான நிலையம், ரெயில் நிலையம், முக்கிய கோவில்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 5-ந்தேதி ஜம்மு- காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன் எதிரொலியாக வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்காக வந்த 1,600 மத்திய துணை ராணுவப்படையினர் வேலூர் மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இப்பணியில் வருகிற 31-ந் தேதி வரை ஈடுபட உள்ளனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாலசுப்பிரமணியன், விஜயகுமார் ஆகியோர் மேற்பார்வையில் 10 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 1,450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
குறிப்பாக பொதுமக்கள் அதிகளவு வருகை தரும் வேலூர் கோட்டை, வழிபாட்டு தலங்களில் அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும் காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை உள்பட ரெயில் நிலையங்களிலும் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட உள்ளன. இந்த பணிகளில் ரெயில்வே போலீசார் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் ஈடுபடுவார்கள்.
மாநில எல்லையோர பகுதிகள் மற்றும் சோதனை சாவடிகளில் போலீசார் உஷார் நிலையில் இருக்கவும், ரோந்து பணியில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணி வருகிற 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி (வியாழக்கிழமை) சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி விமான நிலையம், ரெயில் நிலையம், முக்கிய கோவில்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 5-ந்தேதி ஜம்மு- காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன் எதிரொலியாக வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்காக வந்த 1,600 மத்திய துணை ராணுவப்படையினர் வேலூர் மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இப்பணியில் வருகிற 31-ந் தேதி வரை ஈடுபட உள்ளனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாலசுப்பிரமணியன், விஜயகுமார் ஆகியோர் மேற்பார்வையில் 10 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 1,450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
குறிப்பாக பொதுமக்கள் அதிகளவு வருகை தரும் வேலூர் கோட்டை, வழிபாட்டு தலங்களில் அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும் காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை உள்பட ரெயில் நிலையங்களிலும் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட உள்ளன. இந்த பணிகளில் ரெயில்வே போலீசார் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் ஈடுபடுவார்கள்.
மாநில எல்லையோர பகுதிகள் மற்றும் சோதனை சாவடிகளில் போலீசார் உஷார் நிலையில் இருக்கவும், ரோந்து பணியில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணி வருகிற 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X