என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீரப்பன்சத்திரம் அருகே கழிவுநீர் கால்வாயில் இறந்த நிலையில் ஆண் பிணம் - போலீசார் விசாரணை
Byமாலை மலர்7 Aug 2019 3:21 PM GMT (Updated: 7 Aug 2019 3:21 PM GMT)
ஈரோடு வீரப்பன்சத்திரம் அருகே கழிவுநீர் கால்வாயில் இறந்த நிலையில் கிடந்த ஆண் பிணம் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் அடுத்த பெரிய வலசு, கொத்துக்காரர் வீதியில் உள்ள ஒரு சாக்கடையில் இன்று காலை சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த நிலையில் இறந்து கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாக்கடையில் இறந்து கிடந்த அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.
இறந்த கிடந்த நபர் வெள்ளை வேட்டியும், வெள்ளை பச்சை கலர் கோடு போட்ட டீ சர்ட்டும் அணிந்திருந்தார்.
அவர்போதையில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் நேற்று இரவே தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்றும் தெரிய வருகிறது.
இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கொத்துக்காரர் வீதிப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ஈரோடு வீரப்பன்சத்திரம் அடுத்த பெரிய வலசு, கொத்துக்காரர் வீதியில் உள்ள ஒரு சாக்கடையில் இன்று காலை சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த நிலையில் இறந்து கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாக்கடையில் இறந்து கிடந்த அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.
இறந்த கிடந்த நபர் வெள்ளை வேட்டியும், வெள்ளை பச்சை கலர் கோடு போட்ட டீ சர்ட்டும் அணிந்திருந்தார்.
அவர்போதையில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் நேற்று இரவே தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்றும் தெரிய வருகிறது.
இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கொத்துக்காரர் வீதிப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X