என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விடிய விடிய வாகன சோதனை - ஈரோடு பகுதியில் ஒரே நாளில் 110 ரவுடிகள் கைது
Byமாலை மலர்6 Aug 2019 12:23 PM GMT (Updated: 6 Aug 2019 12:23 PM GMT)
ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய நடத்திய சோதனையில் ஒரே நாளில் 110 ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் அடிதடி, வழிப்பறி ,திருட்டு போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பழைய குற்றவாளிகள் பட்டியலில் உள்ளவர்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக டிஜிபி கடந்த சில தினங்களுக்கு முன்பு பிறப்பித்த உத்தரவில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 5 போலீஸ் சப் டிவி சன்கனில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று செல்வ குமார் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) உத்தரவிட்டு இருந்தார்.
அதன்பேரில் அந்தந்த போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர்கள் சப் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் இரவு விடிய விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஈரோடு பஸ் நிலையம், வழிபாட்டு தலங்கள், காளை மாட்டு சிலை, கருங்கல்பாளையம் காவிரி சோதனை சாவடி, திண்டல், சென்னிமலை ரோடு, பன்னீர் செல்வம் பூங்கா, வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட பகுதியில் சோனை நடந்தது.
இந்த சோதனையில் மக்களை அச்சுறுத்தி வந்த 110 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதில் 40 பேர் மீது குற்ற வழக்குகளும், 52 பேர் நன்னடத்தை விதிகளை மீறிய பழைய குற்றவாளிகள் ஆவர். மேலும் போலி மதுபான ஆலை கஞ்சா விற்பனை போன்ற தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக 18 பேர் மீது ஜாமீனில் வெளி வரமுடியாத குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டினர். இன்றும் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் அடிதடி, வழிப்பறி ,திருட்டு போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பழைய குற்றவாளிகள் பட்டியலில் உள்ளவர்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக டிஜிபி கடந்த சில தினங்களுக்கு முன்பு பிறப்பித்த உத்தரவில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 5 போலீஸ் சப் டிவி சன்கனில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று செல்வ குமார் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) உத்தரவிட்டு இருந்தார்.
அதன்பேரில் அந்தந்த போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர்கள் சப் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் இரவு விடிய விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஈரோடு பஸ் நிலையம், வழிபாட்டு தலங்கள், காளை மாட்டு சிலை, கருங்கல்பாளையம் காவிரி சோதனை சாவடி, திண்டல், சென்னிமலை ரோடு, பன்னீர் செல்வம் பூங்கா, வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட பகுதியில் சோனை நடந்தது.
இந்த சோதனையில் மக்களை அச்சுறுத்தி வந்த 110 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதில் 40 பேர் மீது குற்ற வழக்குகளும், 52 பேர் நன்னடத்தை விதிகளை மீறிய பழைய குற்றவாளிகள் ஆவர். மேலும் போலி மதுபான ஆலை கஞ்சா விற்பனை போன்ற தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக 18 பேர் மீது ஜாமீனில் வெளி வரமுடியாத குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டினர். இன்றும் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X