என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- பெயிண்டர் பலி
Byமாலை மலர்6 Aug 2019 10:28 AM GMT (Updated: 6 Aug 2019 10:28 AM GMT)
பெருந்துறையை அடுத்துள்ள சேனடோரியம் அருகே பின்னால் வந்த பைக் மோதி பைக்கில் சென்ற பெயிண்ட் வேலை பார்க்கும் தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள மேக்கூர் முதலியார் வீதி பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 59). பெயிண்டராக பணிபுரிந்து வரும் இவர் நேற்று முன்தினம் இரவு தனது சொந்த வேலையாக சீனாபுரம் செல்வதற்காக தனது பைக்கில் சென்றுள்ளார். இவர் சேனடோரியத்தை அடுத்துள்ள மேம்பாலம் பகுதியில் சென்றார்.
அப்போது இவருக்கு பின்னால் சுள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபுதேவன் மற்றும் அவரது மனைவி நித்யா ஆகியோர் வந்த பைக் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த செல்வராஜின் பைக் மீது மோதியது. இதில் மூவரும் பலத்த அடிபட்ட நிலையில் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு பெருந்துறை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து செல்வராஜ் மட்டும் மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த செல்வராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெருந்துறையை அடுத்துள்ள மேக்கூர் முதலியார் வீதி பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 59). பெயிண்டராக பணிபுரிந்து வரும் இவர் நேற்று முன்தினம் இரவு தனது சொந்த வேலையாக சீனாபுரம் செல்வதற்காக தனது பைக்கில் சென்றுள்ளார். இவர் சேனடோரியத்தை அடுத்துள்ள மேம்பாலம் பகுதியில் சென்றார்.
அப்போது இவருக்கு பின்னால் சுள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபுதேவன் மற்றும் அவரது மனைவி நித்யா ஆகியோர் வந்த பைக் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த செல்வராஜின் பைக் மீது மோதியது. இதில் மூவரும் பலத்த அடிபட்ட நிலையில் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு பெருந்துறை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து செல்வராஜ் மட்டும் மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த செல்வராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X