search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோட்டார் சைக்கிள் விபத்து
    X
    மோட்டார் சைக்கிள் விபத்து

    மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

    மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் சிகிச்சை பலனின்றி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    விராலிமலை:

    திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர் அருகே உள்ள ராஜகாட்டுப்பட்டியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 33). இவர் சம்பவத்தன்று இனாம்குளத்தூரில் இருந்து விராலிமலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கல்குடி பாலம் அருகே வந்தபோது, அந்த வழியாக விராலூரை சேர்ந்த அரசன் என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது, எதிர் பாராதவிதமாக மதியழகன் மோதினார்.

    இதில் மதியழகன் படுகாயமடைந்தார். இதைபார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதியழகன் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×