என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவி காயம்
    X
    மாணவி காயம்

    பஸ் படிகட்டில் இருந்து தவறி விழுந்து மாணவி காயம்

    டி.என்.பாளையத்தில் பஸ் படிகட்டில் இருந்து தவறி விழுந்து மாணவி காயமடைந்த சம்பவம் குறித்து பங்களாபுதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    டிஎன்.பாளையம்:

    டி.என்.பாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி (49) தொழிலாளி இவரது மகள் சண்முகப்பிரியா (16), பங்களா புதூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் 1 படித்து வருகிறார்.

    கடந்த 30-ந் தேதி டி.என்.பாளையத்தில் இருந்து பங்களாபுதூர் பள்ளிக்கு செல்ல, பஸ் நிறுத்தத்தில் இருந்து அந்த வழியாக வந்த அரசு பஸ்சில் ஏறினார்.

    அப்போது ஓட்டுநர் வெங்கிடுசாமி (45) அனைவரும் ஏறி விட்டார்கள் என்று நினைத்து பஸ்சை எடுத்தார்.

    அப்போது சண்முகப் பிரியா தடுமாறி படியில் இருந்து தவறி கிழே விழுந்தார். இதை கண்ட அதிர்ச்சி அடைந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்சை நிறுத்துங்கள் என சத்தம் போட்டனர். இதையடுத்து டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.

    இதில் தவறி விழுந்த மாணவி சண்முகப்பிரியாவிற்கு பின் பக்க தலை, மற்றும் கை, கால்களில் காயம் ஏற்பட்டது.

    அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு மேல் சிகிச்சைக்கு கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    மாணவியின் தந்தை பங்களாபுதூர் போலீசில் புகார் தெரிவித்தார். பள்ளி மாணவிக்கு விபத்து ஏற்படுத்தியதாக அரசு பஸ் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து பங்களாபுதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×