search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவன் காயம்
    X
    மாணவன் காயம்

    ஆசிரியர்கள் பிரம்பால் அடித்ததில் பள்ளி மாணவன் காயம்

    நாகையில் ஆசிரியர்கள் பிரம்பால் அடித்ததில் பள்ளி மாணவன் காயமடைந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த சலீம் ராஜா என்பவரது மகன் முஹம்மது அனஸ். நாகையில் உள்ள சி.எஸ்.ஐ அரசு உதவிபெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் ஆசிரியர் வகுப்பில் இல்லாத காரணத்தால் பள்ளி வளாகத்தில் சக நண்பர்களுடன் விளையாடி உள்ளார்.

    இதனை கண்ட தலைமை ஆசிரியர் தன்ராஜ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஸ்டீபன் ஆகியோர் முஹம்மது அனஸ், யூசுப், ஹரி பாலன் ஆகிய மூவரையும் பிரம்பால் அடித்துள்ளனர். இரண்டு ஆசிரியர்களும் மாறி மாறி அடித்ததில் தொடை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் காயமடைந்த முஹம்மது அனசை பெற்றோர் மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நாகை டவுன் போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே போலீசார் வழக்குப்பதிவு செய்து இரண்டு ஆசிரியர்களையும் உடனே கைது செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×