என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிரியர்கள் பிரம்பால் அடித்ததில் பள்ளி மாணவன் காயம்
Byமாலை மலர்1 Aug 2019 8:59 AM GMT (Updated: 1 Aug 2019 8:59 AM GMT)
நாகையில் ஆசிரியர்கள் பிரம்பால் அடித்ததில் பள்ளி மாணவன் காயமடைந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த சலீம் ராஜா என்பவரது மகன் முஹம்மது அனஸ். நாகையில் உள்ள சி.எஸ்.ஐ அரசு உதவிபெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஆசிரியர் வகுப்பில் இல்லாத காரணத்தால் பள்ளி வளாகத்தில் சக நண்பர்களுடன் விளையாடி உள்ளார்.
இதனை கண்ட தலைமை ஆசிரியர் தன்ராஜ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஸ்டீபன் ஆகியோர் முஹம்மது அனஸ், யூசுப், ஹரி பாலன் ஆகிய மூவரையும் பிரம்பால் அடித்துள்ளனர். இரண்டு ஆசிரியர்களும் மாறி மாறி அடித்ததில் தொடை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் காயமடைந்த முஹம்மது அனசை பெற்றோர் மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நாகை டவுன் போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே போலீசார் வழக்குப்பதிவு செய்து இரண்டு ஆசிரியர்களையும் உடனே கைது செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த சலீம் ராஜா என்பவரது மகன் முஹம்மது அனஸ். நாகையில் உள்ள சி.எஸ்.ஐ அரசு உதவிபெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஆசிரியர் வகுப்பில் இல்லாத காரணத்தால் பள்ளி வளாகத்தில் சக நண்பர்களுடன் விளையாடி உள்ளார்.
இதனை கண்ட தலைமை ஆசிரியர் தன்ராஜ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஸ்டீபன் ஆகியோர் முஹம்மது அனஸ், யூசுப், ஹரி பாலன் ஆகிய மூவரையும் பிரம்பால் அடித்துள்ளனர். இரண்டு ஆசிரியர்களும் மாறி மாறி அடித்ததில் தொடை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் காயமடைந்த முஹம்மது அனசை பெற்றோர் மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நாகை டவுன் போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே போலீசார் வழக்குப்பதிவு செய்து இரண்டு ஆசிரியர்களையும் உடனே கைது செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X