search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    குத்தாலம் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி 5 வயது சிறுவன் பலி

    மினி பஸ் சக்கரம் ஏறி சிறுவன் பலியான சம்பவம் குத்தாலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பாக மினி பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே திருமணஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மகன் விஸ்வா (வயது 5).

    இந்த நிலையில் விஸ்வாவும், சிவானந்தம் அக்காள் மகள் மோனிசாவும் குத்தாலத்தில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு மினி பஸ்சில் வந்து இறங்கினர்.

    அப்போது மோனிசா முதலில் பஸ்சில் இருந்து இறங்கினார். அடுத்ததாக சிறுவன் விஸ்வா, இறங்கிய போது டிரைவர் கவனிக்காமல் பஸ்சை கிளப்பினார்.

    இதில் சிறுவன் நிலை தடுமாறி கீழே விழுந்தான். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் சிறுவன் விஸ்வா மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே விஸ்வா பரிதாபமாக இறந்தான்.

    இந்த சம்பவம் பற்றி குத்தாலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் மினி பஸ் டிரைவர் விக்னேசை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×