என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளி வேன் மோதி 2 வயது பெண் குழந்தை பலி
Byமாலை மலர்24 July 2019 6:06 PM GMT (Updated: 24 July 2019 6:06 PM GMT)
பள்ளி வேன் மோதி 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
ஆவூர்:
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர், பாலாண்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது 29). இவரது மனைவி இலக்கியா. இவர்களுக்கு 2 வயதில் சகானா என்ற ஒரே பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை சகானா தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வேனில் இருந்து மாணவர்களை இறக்கிவிட்டனர். அந்த நேரத்தில் வேன் முன்பு குழந்தை சகானா நின்றதை கவனிக்காத டிரைவர், திடீரென வேகமாக பள்ளி வேனை ஓட்டினார்.
அப்போது சகானா மீது வேன் மோதி, சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சகானா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அங்கிருந்து வேன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதைபார்த்து அங்கு ஓடிவந்த குழந்தையின் தாய் இலக்கியா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து மாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X