என் மலர்
செய்திகள்

நாட்டறம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் இரவில் சாலை மறியல்
நாட்டறம்பள்ளி:
நாட்டறம்பள்ளி அருகே உள்ள கூத்தாண்டகுப்பத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் வழங்கபடவில்லை. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறபடுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு வாணியம்பாடி - பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுசாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
எங்கள் பகுதியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் வழங்கமால் வருகின்றனர் இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இச்சம்பவத்தால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.






