என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆம்பூர் அருகே கிணற்றில் பாறை சரிந்து தொழிலாளி பலி
அணைக்கட்டு:
மாதனூர் அடுத்த பாலூரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது விவசாய நிலம் கிணறு உள்ளது. விவசாய நிலத்தை ஆழப்படுத்துவதற்காக நேற்று கிணற்றுக்குள் இருந்த பாறைகளுக்கு வெடி வைத்தனர்.
இன்று காலை ராமமூர்த்தி, மாதனூர் அடுத்த பட்டுவாம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் (48), உள்பட 5 பேர் கிணற்றுக்குள் இறங்கி வெடி வைத்து தகர்த்த பாறைகளை கிரேன் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு பக்கத்தில் இருந்த பாறை சரிந்து செல்வராஜ் மீது விழுந்தது. செல்வராஜ் பாறையின் அடியில் சிக்கி உயிருக்கு போராடினார். கிணற்றில் இருந்தவர்கள் உடனடியாக மேலே வந்து மேலும் சிலரை அழைத்து சென்று சுமார் 2 மணி நேரம் போராடி பாறையை அகற்றி மயங்கிய நிலையில் கிடந்த செல்வராஜை மீட்டனர்.பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மாதனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்வராஜை பரிசோதித்த டாக்டர்கள் செல்வராஜ் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்வராஜ் இறந்ததை கேள்விப்பட்ட அவரது உறவினர்கள் செல்வராஜ் இறப்புக்கு நஷ்டஈடு கேட்டு ராமமூர்த்தி வீட்டை முற்றுகையிட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்