என் மலர்
செய்திகள்

வீடு புகுந்து கொள்ளை
குரோம்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
குரோம்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
குரோம்பேட்டை வேதாந்தம் காலனியை சேர்ந்தவர் ரிஷி (85). இவரது மனைவி கமலா. இவர்கள் 2 பேரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். கடந்த 12-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு மேடவாக்கத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று இருந்தனர்.
இன்று காலை திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 10 பவுன் நகைகள், ரூ.6 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. பூஜை அறையில் இருந்து 1 கிலோ எடையுள்ள வெள்ளி குத்து விளக்கு மற்றும் தட்டு போன்றவையும் திருடப்பட்டிருந்தன.இது குறித்து குரோம்பேட்டை போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story






