search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நாகையில் மணல் கடத்தி வந்த வாலிபர் கைது

    நாகையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணல் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திட்டச்சேரி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மாணவன் பேட்டை என்ற இடத்தில் வந்த ஒரு சரக்கு ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. 

    இதையடுத்து சரக்கு ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மாணவன் பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கன்னிராஜ் மகன் முருகராஜ் (வயது 25) என்பதும் இவர் திருமலை ராஜன் ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளிவந்தது தெரியவந்தது. இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகராஜை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×