என் மலர்
செய்திகள்

கொலை செய்யப்பட்ட பேத்தி, மகள்
தாளவாடி அருகே ரூ.1 லட்சம் பணத்துக்காக மகள், பேத்தியை கொன்ற தந்தை - பரபரப்பு தகவல்கள்
தாளவாடி அருகே ரூ.1 லட்சம் பணத்துக்காக மகள் மற்றும் பேத்தியை கொன்ற தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த மல்லன்குழி கிராமத்தை சேர்ந்தவர் நாகண்ணா. இவரது மனைவி ராஜம்மா. இவர்களுக்கு கீதா என்ற மகளும் மாதேவ பிரசாத் என்ற மகனும் உள்ளனர். நாகண்ணா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ராஜம்மா மற்றும் மகள் கீதாவுடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் அவரது குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் தாய்- மகள் இருவரும் உடல் கருகி பலியானார்கள். அவர்கள் உடல்கள் முற்றிலும் எரிந்து உருக்குலைந்து காணப்பட்டது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து சத்தியமங்கலம் டி.எஸ்.பி. சுப்பையா தலைமையில் தாளவாடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் ராஜம்மா கணவர் நாகண்ணா இறந்த பின் தனது மகன் மதேவபிரசாத் மற்றும் மகள் கீதாவுடன் தனது தந்தை வீட்டில் இருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார். தன்னிடம் இருந்த 1 லட்சம் ரூபாய் பணத்தை தனது தந்தையிடம் கொடுத்து வைத்தார்.
இந்த நிலையில் தந்தை வீட்டில் எத்தனை நாட்கள் இருப்பது என எண்ணிய ராஜம்மா வீடு கட்ட முடிவு செய்தார். இதற்காக தந்தை வீட்டில் இருந்து மகள், மகனுடன் வெளியே வந்து தனது சொந்த இடத்தில் குடிசை அமைத்து வசித்து வந்தார். குடிசை வீட்டில் எவ்வளவு நாளைக்கு இருப்பது வீடு கட்டி அதில் வசிக்கலாம் என ராஜம்மா முடிவு செய்தார். இதற்காக தனது தந்தையிடம் கொடுத்து வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்தை கேட்டார். ஆனால் அந்த பணத்தை அவரது தந்தை செலவு செய்து விட்டதாக தெரிவித்தார்.
ராஜம்மா தொடர்ந்து தந்தையிடம் பணத்தை கேட்டு வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை தனது உறவினர்கள் உதவியுடன் ராஜம்மா மற்றும் கீதாவை துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். தொடர்ந்து அதிகாலையில் குடிசை வீட்டுக்கு தீ வைத்தனர். பிறகு வீடு தீ பிடித்து எரிகிறது என நாடகம் ஆடியது தெரியவந்து.இதையடுத்து ராஜம்மாவின் தந்தை சிக்குமாதேகவுடா உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து சத்தியமங்கலம் மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த மல்லன்குழி கிராமத்தை சேர்ந்தவர் நாகண்ணா. இவரது மனைவி ராஜம்மா. இவர்களுக்கு கீதா என்ற மகளும் மாதேவ பிரசாத் என்ற மகனும் உள்ளனர். நாகண்ணா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ராஜம்மா மற்றும் மகள் கீதாவுடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் அவரது குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் தாய்- மகள் இருவரும் உடல் கருகி பலியானார்கள். அவர்கள் உடல்கள் முற்றிலும் எரிந்து உருக்குலைந்து காணப்பட்டது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து சத்தியமங்கலம் டி.எஸ்.பி. சுப்பையா தலைமையில் தாளவாடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் ராஜம்மா கணவர் நாகண்ணா இறந்த பின் தனது மகன் மதேவபிரசாத் மற்றும் மகள் கீதாவுடன் தனது தந்தை வீட்டில் இருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார். தன்னிடம் இருந்த 1 லட்சம் ரூபாய் பணத்தை தனது தந்தையிடம் கொடுத்து வைத்தார்.
இந்த நிலையில் தந்தை வீட்டில் எத்தனை நாட்கள் இருப்பது என எண்ணிய ராஜம்மா வீடு கட்ட முடிவு செய்தார். இதற்காக தந்தை வீட்டில் இருந்து மகள், மகனுடன் வெளியே வந்து தனது சொந்த இடத்தில் குடிசை அமைத்து வசித்து வந்தார். குடிசை வீட்டில் எவ்வளவு நாளைக்கு இருப்பது வீடு கட்டி அதில் வசிக்கலாம் என ராஜம்மா முடிவு செய்தார். இதற்காக தனது தந்தையிடம் கொடுத்து வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்தை கேட்டார். ஆனால் அந்த பணத்தை அவரது தந்தை செலவு செய்து விட்டதாக தெரிவித்தார்.
ராஜம்மா தொடர்ந்து தந்தையிடம் பணத்தை கேட்டு வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை தனது உறவினர்கள் உதவியுடன் ராஜம்மா மற்றும் கீதாவை துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். தொடர்ந்து அதிகாலையில் குடிசை வீட்டுக்கு தீ வைத்தனர். பிறகு வீடு தீ பிடித்து எரிகிறது என நாடகம் ஆடியது தெரியவந்து.இதையடுத்து ராஜம்மாவின் தந்தை சிக்குமாதேகவுடா உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து சத்தியமங்கலம் மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story






