என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரை துரத்திய யானையை படத்தில் காணலாம்.
    X
    காரை துரத்திய யானையை படத்தில் காணலாம்.

    சத்தியமங்கலம் வனப்பகுதியில் இன்று கார்களை துரத்திய யானைகளால் பரபரப்பு

    சத்தியமங்கலம் வனப்பகுதியில் இன்று கார்களை துரத்திய யானைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சத்தியமங்லம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, கரடி, சிறுத்தை, புள்ளி மான்கள் என ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இதில் ஆசனூர் வனப்பகுதியில் யானைகள் அதிகம் வசிக்கின்றன. யானைகள் அவ்வபோது சாலையின் நடுவில் நின்று கொண்டும், வாகனங்களை துரத்தி கொண்டும் செல்வது நடக்கும். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று காலை காரப்பள்ளம் அருகே 6 யானைகள் தண்ணீர் குடித்துவிட்டு ரோட்டை கடக்கும் போது அவ்வழியாக சென்ற கார்கள் அதிக ஒலி எழுப்பியதால் யானைகள் திடீரென காரை துரத்த ஆரம்பித்தது. அந்த கார் பின்னோக்கி சென்றதால் யானையிடம் இருந்து தப்பியது.

    அந்த யானைகள் கூட்டம் 30 நிமிடம் ரோட்டில் நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து யானைகள் கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றது.

    யானைகள் கூட்டம் ரோட்டை கடக்கும் போது வாகன ஓட்டிகள் அதிக அளவு ஒலி எழுப்ப கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×