என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓசூர் அருகே லாரி மோதி விவசாயிகள் 2 பேர் பலி
Byமாலை மலர்2 July 2019 6:25 PM GMT (Updated: 2 July 2019 6:25 PM GMT)
ஓசூர் அருகே லாரி மோதி விவசாயிகள் 2 பேர் பலியானார்கள்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள நல்லூரை சேர்ந்தவர்கள் நாராயணன் (வயது 35), முனிராஜ் (35). இருவரும் விவசாயிகள். இந்தநிலையில் நேற்று இவர்கள் இருவரும் மோட்டார்சைக்கிளில் பாகலூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். ஓசூர் அருகே ஜீ.மங்கலம் என்ற இடத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக இருவரும் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட நாராயணன், முனிராஜ் ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓசூர் அருகே லாரி மோதி விவசாயிகள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள நல்லூரை சேர்ந்தவர்கள் நாராயணன் (வயது 35), முனிராஜ் (35). இருவரும் விவசாயிகள். இந்தநிலையில் நேற்று இவர்கள் இருவரும் மோட்டார்சைக்கிளில் பாகலூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். ஓசூர் அருகே ஜீ.மங்கலம் என்ற இடத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக இருவரும் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட நாராயணன், முனிராஜ் ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓசூர் அருகே லாரி மோதி விவசாயிகள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X