என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது (கோப்பு படம்)
    X
    கைது (கோப்பு படம்)

    அரக்கோணம் அருகே மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது

    அரக்கோணம் அருகே பைக்கில் வைத்து மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று வந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையில் நேற்று இரவு போலீசார் சோளிங்கர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் பைக்கை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றார். போலீசார் பைக்கை சோதனை செய்த போது அதில் 105 லிட்டர் சாராயம் கேனில் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதனை போலீசார் கைப்பற்றினர்.

    பின்னர் நெமிலி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் பைக்கில் வைத்து மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று கொண்டிருந்தார்.

    அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் அரக்கோணத்தை சேர்ந்த சுரேஷ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 40 மது பாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

    மேலும் சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×