என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி டிரைவர் தற்கொலை
    X

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி டிரைவர் தற்கொலை

    வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வேலூர்:

    வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி டிரைவர் வெங்கடேசன் (வயது 36). இவர் மருத்துவ கல்லூரி முதல்வர் கார் மற்றும் ஆஸ்பத்திரி வாகனங்களை ஓட்டி வந்தார்.

    மருத்துவகல்லூரி எதிரே உள்ள ஊழியர்கள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வீட்டில் தூங்கி கொண்டிருந்த வெங்கடேசனை இன்று அதிகாலை காணவில்லை.

    அவரது மனைவி லெட்சுமி பல இடங்களில் தேடினார். இவர்களது வீட்டின் அருகே காலியாக கிடந்த வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது வெங்கடேசன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதனைக் கண்டு அதிர்ந்து போன லெட்சுமி கதறி அழுது கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி சென்றனர். வெங்கடேசன் உயிரோடு இருக்கலாம் என நினைத்து தூக்கு கயிற்றை அறுத்து கீழே இறக்கினர்.

    அப்போது அவர் இறந்தது தெரியவந்தது. இதுபற்றி வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த வெங்கடேசனுக்கு கிருத்திகா (10) என்ற மகள், ஜவகர் (7) என்ற மகன் உள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

    போலீஸ் விசாரணையில் வெங்கடேசன் அதிக கடன் வாங்கியது தெரியவந்துள்ளது. கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×