என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேலூரில் திடீர் மழை- வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
வேலூர்:
வேலூரில் அக்னி வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் கோடை வெயிலை குளிர்விக்கும் வகையில் மழை பெய்யுமா? என்று பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. வேலூரில் நேற்று மதியம் வெயில் சுட்டெரித்தது.
மாலையில் திடீரென வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மிதமான மழை பெய்தது. அரக்கோணத்தில் மாலை 3 மணியளவில் திடீரென்று பெய்த மழை சுமார் ½ மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. மிதமான மழையாக தொடங்கிய பின்னர் பலத்த மழையாக மாறியது.
பலத்த மழையின் காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காந்திரோடு, பழனிப்பேட்டை பகுதிகள் வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கொட்டும் மழையில் நனைந்தபடி சென்றனர். அதேபோல் காவேரிப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் பலத்த மழை பெய்தது.
மேலும் காட்பாடி, குடியாத்தம், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மாலை நேரத்தில் திடீரென்று பெய்த மழையால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலக ஊழியர்கள், வியாபாரிகள் மழையில் நனைந்தபடி வீட்டிற்கு சென்றனர்.
கோடை வெயிலை குளிர்விக்கும் வகையிலும், சொற்ப அளவிலாவது குடிநீர் தேவை ஈடு செய்யும் வகையில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்