search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலத்தின் சுவரில் மோதியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு தொழிலாளி பலி
    X

    பாலத்தின் சுவரில் மோதியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு தொழிலாளி பலி

    திருப்பத்தூர் அருகே பாலத்தின் சுவரில் மோதியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட தொழிலாளி பலியானார்.
    திருப்பத்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்வம் மகன் கார்த்திக் (வயது 31). இவர் திருப்பத்தூர் அருகே மதகுபட்டியில் ஒரு மர அறுவை மில்லில் வேலை செய்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக சொந்த ஊருக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் இரவு மதகுபட்டிக்கு வேலைக்கு வந்து கொண்டிருந்தார். திருப்பத்தூர்-சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில், அரளிக்கோட்டையைத் தாண்டி சென்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைத் தடுமாறி ரோட்டின் பக்கவாட்டில் இருந்த பாலத்தின் கைபிடி சுவர் மீது மோதியது.

    அதில் கார்த்திக் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து திருக்கோஷ்டியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
    Next Story
    ×