என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகையில் கடல் சீற்றத்தில் மூழ்கிய விசைப்படகை மீட்க மீனவர்கள் தீவிரம்
Byமாலை மலர்18 Jun 2019 4:28 PM GMT (Updated: 18 Jun 2019 4:28 PM GMT)
நாகையில் கடல் சீற்றத்தால் மூழ்கிய விசைப்படகை மீட்க மீனவர்கள் 2-வது நாளாக மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறனர்.
நாகப்பட்டினம்:
நாகை நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சின்னத்தம்பி என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகு கடல் சீற்றம் காரணமாக கடலில் மூழ்கியது. இதனை கண்ட சக மீனவர்கள் படகின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் திரண்ட மீனவர்கள் படகில் இருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் மற்றும் பொருட்களை பைபர் படகு மூலம் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். தொடர்ந்து கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்கும் பணியில் இன்றும் 2-வது நாளாக 20 படகுகளில் சென்று நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடலில் மூழ்கி சேதமடைந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான விசைப்படகிற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என நம்பியார் நகர் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சின்னத்தம்பி என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகு கடல் சீற்றம் காரணமாக கடலில் மூழ்கியது. இதனை கண்ட சக மீனவர்கள் படகின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் திரண்ட மீனவர்கள் படகில் இருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் மற்றும் பொருட்களை பைபர் படகு மூலம் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். தொடர்ந்து கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்கும் பணியில் இன்றும் 2-வது நாளாக 20 படகுகளில் சென்று நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடலில் மூழ்கி சேதமடைந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான விசைப்படகிற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என நம்பியார் நகர் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X