search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    செங்கல்பட்டு அருகே சிக்னல் கோளாறால் மின்சார ரெயில்கள் நிறுத்தம்

    செங்கல்பட்டு அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை அடுத்த கொளவாய் ஏரி பகுதியில் இன்று காலை 8.40 மணி அளவில் மின்சார ரெயில் தண்டவாளத்தில் திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது.

    இதனால் செங்கல்பட்டு- சென்னை கடற்கரை மற்றும் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு என இரு மார்க்கத்திலும் வந்த மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து சிக்னல் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். காலை 9.40-க்கு பின்னர் சிக்னல் சரிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மின்சார ரெயில்கள் வழக்கம்போல் ஓடின.

    மின்சார ரெயில் சேவை பாதிப்பால் காலையில் வேலைக்கு சென்றோரும், பள்ளி-கல்லூரிக்கு சென்ற மாணவ-மாணவிகளும் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் பஸ்கள், ஷேர் ஆட்டோக்களில் மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்ட இடங்களில் இருந்து சென்றனர். இதனால் மாநகர பஸ்களில் கூட்டம் அலைமோதியது.
    Next Story
    ×