என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூரை பசுமையாக்க 1 லட்சம் விதை பந்துகள் தயாரிப்பு
Byமாலை மலர்15 Jun 2019 10:14 AM GMT (Updated: 15 Jun 2019 10:14 AM GMT)
வேலூரை பசுமையாக்க 100 பள்ளி மாணவர்கள் விதை பந்து தயாரிக்கும் பணியை கலெக்டர் ராமன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
வேலூர்:
காட்பாடி ரெயில் நிலையம் அருகே சாரணர் இயக்கம் சார்பில் 1 லட்சம் விதை பந்துகள் தயாரிக்கப்படுகிறது. 100 பள்ளி மாணவர்கள் விதைபந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கலெக்டர் ராமன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-
மனித உயிரினங்கள் தோன்றி 2 அல்லது 3 லட்சம் ஆண்டுகள் இருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. 10 லட்சம் ஆண்டுக்கு முன்பு பூமி உருவான போதே மரங்கள், செடிகள் தோன்றியது.
பூமியை சுற்றி இருந்த நச்சுகாற்றை மரங்கள் சுவாசித்து ஆக்சிஜனை வெளியிட்டதால் உயிரினங்கள் தோன்றியது.
அடிப்படை தேவைக்காக இயற்கையை அழித்து வருகிறோம். இதுபெரிய பிரச்சினையை ஏற்படுத்தும். இதனால் அடுத்த தலைமுறை வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.
மழை குறைவு, வெப்பம், நீர் நிலைகள் மாசு ஏற்படும். இதனை தடுக்க மரங்களை வளர்க்க வேண்டும். விதை பந்து தயாரிக்கும் மாணவர்களுக்கு பாராட்டுகள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விதை பந்துகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைகள், சாலையோரங்களில் தூவி மரங்கள் வளர்க்கப்படும் என தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் சாரணர் இயக்க ஆணையர் பரிமளாகுமார், காட்பாடி ரெயில் நிலைய மேலாளர் ரவீந்திரநாத் மற்றும் கிருஷ்ணன், மணிகண்டன், சுந்தரராஜன், மகேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காட்பாடி ரெயில் நிலையம் அருகே சாரணர் இயக்கம் சார்பில் 1 லட்சம் விதை பந்துகள் தயாரிக்கப்படுகிறது. 100 பள்ளி மாணவர்கள் விதைபந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கலெக்டர் ராமன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-
மனித உயிரினங்கள் தோன்றி 2 அல்லது 3 லட்சம் ஆண்டுகள் இருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. 10 லட்சம் ஆண்டுக்கு முன்பு பூமி உருவான போதே மரங்கள், செடிகள் தோன்றியது.
பூமியை சுற்றி இருந்த நச்சுகாற்றை மரங்கள் சுவாசித்து ஆக்சிஜனை வெளியிட்டதால் உயிரினங்கள் தோன்றியது.
அடிப்படை தேவைக்காக இயற்கையை அழித்து வருகிறோம். இதுபெரிய பிரச்சினையை ஏற்படுத்தும். இதனால் அடுத்த தலைமுறை வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.
மழை குறைவு, வெப்பம், நீர் நிலைகள் மாசு ஏற்படும். இதனை தடுக்க மரங்களை வளர்க்க வேண்டும். விதை பந்து தயாரிக்கும் மாணவர்களுக்கு பாராட்டுகள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விதை பந்துகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைகள், சாலையோரங்களில் தூவி மரங்கள் வளர்க்கப்படும் என தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் சாரணர் இயக்க ஆணையர் பரிமளாகுமார், காட்பாடி ரெயில் நிலைய மேலாளர் ரவீந்திரநாத் மற்றும் கிருஷ்ணன், மணிகண்டன், சுந்தரராஜன், மகேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X