search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி பதவி ஏற்பு விழா - எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்
    X

    பிரதமர் மோடி பதவி ஏற்பு விழா - எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்

    பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான விழா இன்று இரவு 7 மணிக்கு டெல்லியில் நடைபெறவுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து அவர் இன்று காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

    இரவு 7 மணிக்கு நடக்கும் பிரதமர் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார்.

    அவருடன், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், பாமக நிறுவனர் ராமதாஸ், ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோரும் டெல்லி சென்றுள்ளனர்.
    Next Story
    ×