search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆடு கடத்தலுக்கு பயன்படுத்திய கார்.
    X
    ஆடு கடத்தலுக்கு பயன்படுத்திய கார்.

    அச்சிறுப்பாக்கம் பகுதியில் காரில் வந்து ஆடு திருடிய கும்பல்

    அச்சிறுப்பாக்கம் பகுதியில் காரில் வந்து ஆடு திருடியது தொடர்பாக ஒருவனை போலீசார் மடக்கிப் பிடித்தனர். தப்பி ஓடிய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுராந்தகம்:

    அச்சிறுப்பாக்கம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் நேற்று இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது, சாலையின் ஓரமாக கார் ஒன்று டயர் பஞ்சராகி நின்றது. அந்த காரின் வெளியே இருந்த 3 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல் கூறினர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரின் பின்பகுதி கதவை திறந்து காட்டுமாறு கூறினர்.

    அதில் 18 ஆடுகள் இறந்த நிலையில் இருந்தன. உடனே, அங்கு நின்ற 3 வாலிபர்களும் தப்பி ஓடினர். அவர்களில் ஒருவனை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவன் பல்லாவரத்தை சேர்ந்த சாய் குமார் என்பது தெரிந்தது. அவர்கள் வந்தவாசி அருகே உள்ள கிராமங்களுக்கு சென்று ஆடுகளை திருடி காரில் கொண்டு வந்தது தெரிந்தது. வரும் வழியில் அச்சிறுப்பாக்கம் பகுதியிலும் அவர்கள் ஆடு திருடியுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து காருடன் ஆடுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 2 பேர் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குபதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×