search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருப்புகோட்டையில் ஏடிஎம் மையம் பற்றி எரிந்ததால் பரபரப்பு
    X

    அருப்புகோட்டையில் ஏடிஎம் மையம் பற்றி எரிந்ததால் பரபரப்பு

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் ஏடிஎம் மையம் திடீரென பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மதுரை சிவன் சாலையில் அமைந்துள்ளது தனியார் ஏடிஎம் மையம்.

    இந்த மையத்தில் இன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து தீ மளமளவென பரவியது.
     
    தகவலறிந்து சம்பவ் இடத்துக்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முதல்கட்ட விசாரணையில் தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் என தெரிய வந்துள்ளது.

    தனியார் ஏடிஎம் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×