search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூதப்பாண்டி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை
    X

    பூதப்பாண்டி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை

    பூதப்பாண்டி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    பூதப்பாண்டியை அடுத்த இறச்சகுளம் பகுதியில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூஜைகள் நடைபெற்ற பின்னர் பூசாரி கோவில் நடையை பூட்டிவிட்டு சென்றார்.

    பின்னர் மறுநாள் காலையில் வழக்கமான பூஜைகளை மேற்கொள்ள பூசாரி கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து சம்பவம் குறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் கோவிலினுள் புகுந்த கொள்ளையர்கள் முத்தாரம்மன், முத்தீஸ்வரர் சன்னதிகளின் பூட்டை உடைத்து சாமி, அம்மன் சிலைகளில் இருந்த 2 ஜோடி கம்மல், ஒரு ஜோடி பொட்டு, ஒரு ஜோடி மூக்குத்தி உள்பட ஒரு பவுன் தங்க நகைகள் மற்றும் 8 வெள்ளி காப்புகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அம்மன் சன்னதி, சாமி சன்னதியில் பூட்டு உடைக்கப்பட்ட இடங்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் உள்ளதா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×