என் மலர்
செய்திகள்

திருப்பத்தூர் அருகே முன்விரோத தகராறில் வாலிபர் மீது தாக்குதல்
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே முன்விரோத தகராறில் வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள கசிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜா (45). அதே பகுதியை சேர்ந்தவர் தாமரை செல்வம் (40). முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர். இவர்கள் இருவருக்கும் காளை விடும் விழாவில் ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் ராஜா நேற்று கசிநாயக்கன்பட்டி மெயின்ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தாமரை செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் கொண்ட கும்பல் ராஜாவை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.
இதில் ராஜா படுகாயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் அருகே உள்ள கசிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜா (45). அதே பகுதியை சேர்ந்தவர் தாமரை செல்வம் (40). முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர். இவர்கள் இருவருக்கும் காளை விடும் விழாவில் ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் ராஜா நேற்று கசிநாயக்கன்பட்டி மெயின்ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தாமரை செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் கொண்ட கும்பல் ராஜாவை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.
இதில் ராஜா படுகாயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.
Next Story






