search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து வாலிபர் பலி
    X

    நாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து வாலிபர் பலி

    சுசீந்திரம் அருகே நாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    என்.ஜி.ஓ.காலனி:

    பூதப்பாண்டி அடுத்த தாழக்குடியைச் சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 35). இவர் 4 வழிச்சாலை அமைக்கும் பணியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலை முடிந்து முத்துராஜ், தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சுசீந்திரத்தை அடுத்த குலசேகரன்புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நாய் ஒன்று குறுக்கே பாய்ந்தது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து முத்துராஜ் தவறி கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துராஜ் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தெங்கம்புதூர் கீழகாட்டு விளையைச் சேர்ந்தவர் தங்கதுரை (வயது 57). இவர், கீழக்காட்டுவிளை பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.

    படுகாயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×