search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை சென்டிரல்-நாகர்கோவில் இடையே அதிவேக ரெயில் வாரம் 3 முறை இயக்கப்படும்
    X

    சென்னை சென்டிரல்-நாகர்கோவில் இடையே அதிவேக ரெயில் வாரம் 3 முறை இயக்கப்படும்

    சென்னை சென்டிரல்-நாகர்கோவில் இடையே அதிவேக ரெயில் வாரம் 3 முறை இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல்-நாகர்கோவில் (12689/12690) அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் வாரம் ஒரு முறை மட்டுமே சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக இயக்கப்பட்டு வந்தது. ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஒரே ரெயிலும் இதுதான். இதனால் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லூரிக்கும் செல்லும் மாணவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இந்த ரெயில் பேருதவியாக இருக்கிறது. இந்த நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று தெற்கு ரெயில்வே வாரத்திற்கு 3 முறை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரலில் இருந்து புறப்படும் ரெயில் திருச்சிக்கு செல்லாமல் சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக நாகர்கோவில் சென்றடையும். இதேபோல் மறுமார்க்கமாக புறப்படும் ரெயில் திருச்சி செல்லாமல் சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரலுக்கு வந்தடையும். தெற்கு ரெயில்வேயின் எதிர்வரும் கால அட்டவணையில் இதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×