என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

திருவோணம் அருகே கூலித்தொழிலாளிகள் மீது தாக்குதல்

திருவோணம்:
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே எடையாத்தியை சேர்ந்தவர்கள் பழனிவேல், கருப்பையன், செவ்வந்தி. இவர்கள் 3 பேரும் கூலித் தொழிலாளர்கள். அதே பகுதியை சேர்ந்தவர்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேல் மற்றும் அண்ணாதுரை, அண்ணாமலை. இவர்கள் கூலித் தொழிலாளர்களான பழனிவேல் உள்ளிட்ட 3 பேரின் இடத்தை அபகரிக்கும் நோக்கத்தில் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முத்துவேல், அண்ணாமலை, அண்ணாதுரை ஆகிய 3 பேரும் நேற்று பழனிவேல், கருப்பையன், செவ்வந்தி ஆகியோரது வீட்டுக்கு சென்று வீட்டை காலி செய்யுமாறு கூறி கற்களால் அவர்களை தாக்கியுள்ளனர். மேலும் 3 பேரின் வீடுகளையும் அடித்து சேதப்படுத்தியதோடு வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி உள்ளனர். கற்கள் வீசி தாக்கியதில் காயமடைந்த பழனிவேலை அப்பகுதியினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் பற்றி பழனிவேல் உள்ளிட்ட 3 பேரும் வாட்டாத்திக்கோட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் வழக்குப்பதிவு செய்து கூலித் தொழிலாளிகளை தாக்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட 3 பேரையும் தேடிவருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
