என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல் - டிரைவர்கள் கைது
Byமாலை மலர்13 May 2019 5:46 PM GMT (Updated: 13 May 2019 5:46 PM GMT)
அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் 2 டிரைவர்களை போலீசார் கைது செய்தனர்.
நாகூர்:
நாகையை அடுத்த நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் நேற்று காலை கங்களாஞ்சேரி சாலை தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை மறித்து சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து லாரியில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் லாரி டிரைவர்கள் கீழ்வேளூர் கோகூர் மெயின் ரோட்டை சேர்ந்த சிவகுமார் (வயது 48), சிக்கல் குற்றம்புரிந்தானிருப்பு சிவன் கோவில் தெருவை சேர்ந்த செல்லதுரை (36) ஆகியோர் என்பதும், இவர்கள் உரிய அனுமதியின்றி வலங்கைமான் பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து மணல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமார், செல்லதுரை ஆகிய 2 பேரையும் கைது செய்ததுடன், 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
நாகையை அடுத்த நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் நேற்று காலை கங்களாஞ்சேரி சாலை தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை மறித்து சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து லாரியில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் லாரி டிரைவர்கள் கீழ்வேளூர் கோகூர் மெயின் ரோட்டை சேர்ந்த சிவகுமார் (வயது 48), சிக்கல் குற்றம்புரிந்தானிருப்பு சிவன் கோவில் தெருவை சேர்ந்த செல்லதுரை (36) ஆகியோர் என்பதும், இவர்கள் உரிய அனுமதியின்றி வலங்கைமான் பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து மணல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமார், செல்லதுரை ஆகிய 2 பேரையும் கைது செய்ததுடன், 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X