search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயன்ற லாரி டிரைவர் குடும்பத்தினர்
    X
    திருவண்ணாமலை கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயன்ற லாரி டிரைவர் குடும்பத்தினர்

    வீட்டை மீட்டு தர கோரி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற லாரி டிரைவர்

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் லாரி டிரைவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள நவாபாளையம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 42) லாரி டிரைவர். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 2 மகள்கள் 1 மகன் உள்ளனர்.

    திருப்பதி குடும்பத்துடன் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை வந்தார். கலெக்டர் கார் நிறுத்தும் இடத்தில் திடீரென தான் மறைத்து கொண்டுவந்த கேனில் இருந்த மண்எண்ணையை மனைவி, 2 மகள்கள், மகன் மீது ஊற்றினார். பின்னர் அவர் மீதும் ஊற்றிக் கொண்டு குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றனர்.

    இதனை கண்ட அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் தடுத்தி நிறுத்தினர். அங்கு வந்த தனி துணை கலெக்டர் வில்சன் ராஜசேகர் திருப்பதியிடம் விசாரணை நடத்தினார்.

    அப்போது 4 ஆண்டுகளுக்கு முன்பு பசுமை திட்டத்தின் கீழ் கட்டிய வீட்டை எனது அண்ணனிடம் ரூ.2 லட்சத்திற்கு அடமானம் வைத்து பணம் பெற்றேன். தற்போது அந்த பணத்தை முழுவதுமாக திருப்பி செலுத்திய பின்னரும் வீட்டின் பத்திரத்தை திருப்பி கொடுக்க மறுக்கிறார்.

    இது குறித்து கேட்ட போது மேலும் ரூ.10 லட்சம் தரும்படி கூறி வீட்டையும் தன் பெயரில் மாற்றி கொடுக்குமாறு மிரட்டி வருவதோடு தற்போது வீட்டை பூட்டி விட்டு எங்களை வெளியேற்றி விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது வீட்டை மீட்டு தரும் படி கூறினார்.

    இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கபடும் மேலும் அந்த பகுதி அதிகாரிகளிடம் கூறி வீட்டை திறக்க நடவடிக்கை எடுக்கபடும் என உறுதியளித்தார்.இதையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    குடும்பத்துடன் லாரி டிரைவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×