search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூரில் கொள்ளையர்கள் 2 பேர் கைது
    X

    திருவள்ளூரில் கொள்ளையர்கள் 2 பேர் கைது

    திருவள்ளூரில் கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் கே.ஜி.பி. நகரில் வசிப்பவர் வர்மா. ஓய்வு பெற்ற பொதுப் பணித்துறை பொறியாளர். இவர் கடந்த 28-ந் தேதி உடல் நிலை சரியில்லாத மனைவியை சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்க சென்று இருந்தார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவை உடைத்து பீரோவில் இருந்த வைரக்கற்கள் பதிக்கபப்ட்ட 60 பவுன் நகை மற்றும் மருத்துவ செலவுக்காக வைத்திருந்த ரூ. 3 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். துணை போலீஸ் சூப்பிரண்டு கங்கா தரன் தலைமையில் தனிப்படையினர் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

    பழைய குற்றவாளிகள் குறித்த விவரத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

    இதில் கொள்ளையில் ஈடுபட்டது பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் சென்னை ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரிந்தது.

    அவர்கள் 2 பேரையும் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சக்தி வேல் ஆகியோர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 35 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேரையும் போலீசார் திருவள்ளூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×