search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகர் அருகே ஓடும் பஸ்சில் ஜேப்படி- 2 வாலிபர்கள் கைது
    X

    விருதுநகர் அருகே ஓடும் பஸ்சில் ஜேப்படி- 2 வாலிபர்கள் கைது

    விருதுநகர் அருகே அரசு அரசு பஸ்சில் ஜேப்படி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    விருதுநகர்:

    நெல்லை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 47). இவர் மதுரை வந்து விட்டு அரசு பஸ்சில் நெல்லைக்கு புறப்பட்டார்.

    விருதுநகர்-சாத்தூர் சாலையில் உள்ள வச்சக்காரப்பட்டி அருகே பஸ் சென்றபோது ராமநாதனிடம் 2 பேர் ஜேப்படி செய்ய முயன்றனர். இதனை உணர்ந்த அவர், டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு பஸ் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ராமநாதன் புகாரின் பேரில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அவர்களிடம் இருந்து ரூ.1,370-ஐ பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களது பெயர் மணிமாறன் (21) சுடலை (24) என்பதும், சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.

    Next Story
    ×