என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகர் அருகே ஓடும் பஸ்சில் ஜேப்படி- 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்9 May 2019 12:45 PM GMT (Updated: 9 May 2019 12:45 PM GMT)
விருதுநகர் அருகே அரசு அரசு பஸ்சில் ஜேப்படி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்:
நெல்லை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 47). இவர் மதுரை வந்து விட்டு அரசு பஸ்சில் நெல்லைக்கு புறப்பட்டார்.
விருதுநகர்-சாத்தூர் சாலையில் உள்ள வச்சக்காரப்பட்டி அருகே பஸ் சென்றபோது ராமநாதனிடம் 2 பேர் ஜேப்படி செய்ய முயன்றனர். இதனை உணர்ந்த அவர், டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் கூறினார்.
இதனைத் தொடர்ந்து வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு பஸ் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ராமநாதன் புகாரின் பேரில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர்களிடம் இருந்து ரூ.1,370-ஐ பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களது பெயர் மணிமாறன் (21) சுடலை (24) என்பதும், சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X